1. அடைக்கலம் ஆண்ட வரே
அடைக்கலம் ஆண்டவரே - எங்கள்
அடைக்கலம் வேறில்லையே - எம்மைப்
படைத்துக் காத்து மீட்டுக் கொண்டவர்
எங்கள் பரமபிதா நீரே.
2. பரம சுதந்திரமே -- எங்கள்
பாத்திரத்தின் பாகமே - உந்தன்
கரமே அருளும் வரமே
கர்த்தா நின் கிருபையின் மா செல்வமே.
3. ஆலோசனை கர்த்தரே - எங்கள்
ஆவியான துாயரே - இந்தப்
பூலோகத்தில் போதம் அளித்திடும்
புனித சகாயர் நீரே.
4. ஆறுதல் அளிப்பவரே - உமை
அண்டிப்பிழைப்போ ரெமை - சதா
ஆற்றித்தேற்றி மாற்றி
ஆட்கொண்டவர் மாறாத பூரணரே.
Comments
Post a Comment