Skip to main content

Posts

Showing posts from February, 2020

கர்த்தாவே நீர் என்னைத் தேற்றும் தேவன்

கர்த்தாவே நீர் என்னைத் தேற்றும் தேவன் நான் என்றும் உம்மையே பற்றிக்கொள்வேன் – 2 சோகத்தால் என் உள்ளம் சோரும்போதும் உம் ஆறுதல் என்னைத் தேற்றும் – 2 கர்த்தாவே நீர் என்னைத் தேற்றும் தேவன் நான் என்றும் உம்மையே பற்றிக்கொள்வேன் 1. என் கால்கள் சறுக்கும் முன்னே நீர் என்னைத் தாங்குகிறீர் – 2 மானானது நீரோடையை – 2 வாஞ்சிப்பதுபோல் உம்மை வாஞ்சிக்கின்றேன் கர்த்தாவே நீர் என்னைத் தேற்றும் தேவன் 2. மானிடரின் வேஷங்களை மாற்றும் உம் நேசம்தனை – 2 உணரும் நல்ல உள்ளம் தாரும் – 2 உமதாவியால் என்னை நிரப்பிடும் கர்த்தாவே நீர் என்னைத் தேற்றும் தேவன் 3. உம் உள்ளம் உடையப்பண்ணும் பாவங்கள் என்னில் உண்டோ – 2 புடமிட்டென்னை பொன்னாக்கிடும் – 2 பரிசுத்த வழியிலே நடத்திடும் கர்த்தாவே நீர் என்னைத் தேற்றும் தேவன் நான் என்றும் உம்மையே பற்றிக்கொள்வேன் – 2 சோகத்தால் என் உள்ளம் சோரும்போதும் உம் ஆறுதல் என்னைத் தேற்றும் – 2 கர்த்தாவே நீர் என்னைத் தேற்றும் தேவன் நான் என்றும் உம்மையே பற்றிக்கொள்வேன்

அடைக்கலம் ஆண்ட வரே - PP234 - 234 (கி.கீ.362)

1. அடைக்கலம் ஆண்ட வரே அடைக்கலம் ஆண்டவரே - எங்கள் அடைக்கலம் வேறில்லையே - எம்மைப் படைத்துக் காத்து மீட்டுக் கொண்டவர் எங்கள் பரமபிதா நீரே. 2. பரம சுதந்திரமே -- எங்கள் பாத்திரத்தின் பாகமே - உந்தன் கரமே அருளும் வரமே கர்த்தா நின் கிருபையின் மா செல்வமே. 3. ஆலோசனை கர்த்தரே - எங்கள் ஆவியான துாயரே - இந்தப் பூலோகத்தில் போதம் அளித்திடும் புனித சகாயர் நீரே. 4. ஆறுதல் அளிப்பவரே - உமை அண்டிப்பிழைப்போ ரெமை - சதா ஆற்றித்தேற்றி மாற்றி ஆட்கொண்டவர் மாறாத பூரணரே.