கர்த்தாவே நீர் என்னைத் தேற்றும் தேவன் நான் என்றும் உம்மையே பற்றிக்கொள்வேன் – 2 சோகத்தால் என் உள்ளம் சோரும்போதும் உம் ஆறுதல் என்னைத் தேற்றும் – 2 கர்த்தாவே நீர் என்னைத் தேற்றும் தேவன் நான் என்றும் உம்மையே பற்றிக்கொள்வேன் 1. என் கால்கள் சறுக்கும் முன்னே நீர் என்னைத் தாங்குகிறீர் – 2 மானானது நீரோடையை – 2 வாஞ்சிப்பதுபோல் உம்மை வாஞ்சிக்கின்றேன் கர்த்தாவே நீர் என்னைத் தேற்றும் தேவன் 2. மானிடரின் வேஷங்களை மாற்றும் உம் நேசம்தனை – 2 உணரும் நல்ல உள்ளம் தாரும் – 2 உமதாவியால் என்னை நிரப்பிடும் கர்த்தாவே நீர் என்னைத் தேற்றும் தேவன் 3. உம் உள்ளம் உடையப்பண்ணும் பாவங்கள் என்னில் உண்டோ – 2 புடமிட்டென்னை பொன்னாக்கிடும் – 2 பரிசுத்த வழியிலே நடத்திடும் கர்த்தாவே நீர் என்னைத் தேற்றும் தேவன் நான் என்றும் உம்மையே பற்றிக்கொள்வேன் – 2 சோகத்தால் என் உள்ளம் சோரும்போதும் உம் ஆறுதல் என்னைத் தேற்றும் – 2 கர்த்தாவே நீர் என்னைத் தேற்றும் தேவன் நான் என்றும் உம்மையே பற்றிக்கொள்வேன்